சர்க்கரை நோய் வந்துவிட்டால் பழங்கள், ஸ்வீட்ஸ் போன்றவை சாப்பிடக்கூடாது என்று நினைத்து ஸ்வீட்ஸ், பழங்களை சாப்பிடாமல் இருக்கிறார்கள். அது தவறு, ஒரு சில பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆப்பிள் :
ஆப்பிளில் அதிக அளவு பைபர் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆப்பிளை சாப்பிடும் போது பசியை அடக்குவதுடன் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.
கொய்யாப்பழம் :
மருத்துவ குணம் நிறைந்த கொய்யாபழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது. கொய்யாப்பழ இலையில் டீ தயார் செய்து அருந்தும் போது பல நன்மை கிடைக்கிறது.
நெல்லிக்காய் :
நெல்லிக்காயில் பாலிஃபீனால் உள்ளது. இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன் மட்டும் இல்லாமல் இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
மாதுளை :
மாதுளை பழம் சர்க்கரை அளவை சீராக்குகிறது. இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
கிவி :
கிவி பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோயாளிகள் கிவி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்கள் உள்ளது.
பப்பாளி :
பப்பாளியில் குளுக்கோஸ் அளவு குறைவாகவும், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. பப்பாளியை தொடர்ந்து சாப்பிடும் போது இன்சுலின் சுரப்பை சீர்ப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பப்பாளி பழம் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழங்கள் :
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை பழங்களில் சிட்ரஸ் அமிலம் நிறைந்துள்ளது. இந்த பழங்களில் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளதால் சர்க்கரை நோயை சீராக்குகிறது.
பெர்ரி பழங்கள் :
சர்க்கரை நோயாளிகள் பெர்ரி பழங்களை தாராளமாக சாப்பிடலாம். இது சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது.