பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் பேராபத்து உண்டாகும் !!!

பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் பேராபத்து உண்டாகும் !!!

பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.

இருப்பினும் பாலில் சில உணவு பொருட்களை சேர்த்து சாப்பிடும் போது ஆபத்தை உண்டாக்கும். பாலுடன் எந்த எந்த உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது ஆபத்தை உண்டாக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

தயிர் :

ஒரே நேரத்தில் பாலுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் போது உடனடியாக காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மீன் :

பாலுடன் மீன் சேர்த்து சாப்பிடுவது நல்லது அல்ல. இதனால் உடல் பருமன் ஏற்படுகிறது.

முள்ளங்கி :

பாலுடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிடும் போது, பால் அருந்திய பிறகு முள்ளங்கி சாப்பிட்டாலும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். இதனால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஆரஞ்சு :

ஆரஞ்சுடன் பால் சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்சனைக்கு வழி வகுக்கும். இதனால் வாயுப்பிரச்சனை, நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

வாழைப்பழம் :

​பாலும் வாழைப்பழமும்இது முற்றிலும் தவறான கருத்து. ஏனெனில், பால் மிகவும் குளிர்ச்சியான உணவு, வாழைப்பழம் சூடான உணவு. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு டாக்சின் எனும் நஞ்சை வயிற்றில் உண்டாக்கும்.

ஸ்டாபெரி :

பாலையும், ஸ்டாபெரியையும் சேர்த்து சாப்பிடுவது தவறான செயலாகும். மீறி சாப்பிட்டால் ஸ்ட்ராபெரியில் உள்ள அமிலத்தன்மை அதிகமான வெப்பத்தை கொடுக்கும். மாறாக பால் குளிர்ச்சியான உணவாகும். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண பிரச்சனைகள் ஏற்படுவதோடு அலர்ஜி, சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *