பாயாசம் என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். பயாசத்தில் பல வகை உள்ளது. ஜவ்வரிசி பாயாசம், சேமியா பாயாசம், பால் பாயாசம், நுங்கு பாயாசம் என்று பல வகை உள்ளது.
பாயாசம், இளநீர் என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். பயாசத்தில் இளநீரை சேர்த்து, இளநீர் பாயசம் செய்யும் போது நாவில் எச்சில் ஊறும். இந்த இளநீர் பாயாசம் செய்வது மிகவும் எளிது. அது மட்டும் இல்லாமல் இளநீர் பாயாசம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இன்றைய பதிவில் நாம் இளநீர் பாயாசம் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
இளநீர் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் :
திக்கான பசும் பால் = 2 கப்
திக்கான தேங்காய் பால் = 1 கப்
இளநீர் வழுக்கை = அரை கப்
சர்க்கரை = 2 கப்
முந்தரி, பாதாம் = தேவைக்கேற்ப
நெய் = சிறிதளவு
ஏலக்காய் = தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் இளநீரையும், இளநீர் வழுக்கையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்றாக கொதித்தவுடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும் ( நாட்டு சர்க்கரையும் சேர்க்கலாம் ).
பால் நன்றாக சுண்டி வந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
சிறிது நெய் விட்டு முந்தரி, திராட்சை பொடியாக நறுக்கி வறுத்துக் கொள்ளவும்.
பால் ஆறியதும் அரைத்து வைத்துள்ள இளநீர் விழுதையும், ஏலக்காய் பொடி, வறுத்து வைத்துள்ள முந்தரி, ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது சுவையான இளநீர் பாயாசம் தயார்.