இன்றைய பதிவில் நாம் எளிமையான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம்….
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
✍️தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.
✍️தாமரை இதழ் தினமும ஒன்று சாப்பிட்டு வர பேசும் திறன் கூடும்.
✍️கீழாநெல்லி செடி முழுவதும் அரைத்து மோரில் கலந்து 2 வேலை குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும்.
✍️திருநீற்றுப் பச்சிலையை அடிக்கடி முகர்ந்தால் தலைபாரம் நீங்கும்.
✍️வேப்ப எண்ணெய்யை மஞ்சளுடன் சேர்த்து கலந்து தடவ பித்த வெடிப்பு குணமாகும்.
✍️சுக்கை அரைத்து பற்றிட தலைவலி குணமாகும்.
✍️நொச்சி இலையை தலையணையாக பயன்படுத்த மண்டை குடைச்சல் தீரும்.
✍️அருகம்புல் தைலம் தேய்த்து குளித்து வர சொறி சிரங்கு குணமாகும்.
✍️வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வர மூளை பலமடையும்.
✍️மருதாணியை எலுமிச்சை சாறுடன் கலந்து அரைத்து பாதங்களில் தடவ பாத எரிச்சல் குணமாகும்.
✍️குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
✍️மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிடலாம்.
✍️நெறி கட்டு விலக வல்லாரைச் சூரணம் நெய்யில் கலந்து சாப்பிடலாம்.
✍️அருகம்புல் 30 கிராம் அளவில் அரைத்து பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமாகும்.
✍️இலுப்பைப் பூவை விரல் வீக்கத்திற்கு தினமும் கட்டி வர விரைவில் குணமாகும்.
✍️தென்னம்பூவை மென்று தின்று வர உள்ரணம் ஆறும்.
✍️மலச்சிக்கலுக்கு முளைக்கீரை நல்ல உணவு.
✍️வெங்காயத்தை வதக்கி ஆசன வாயில் கட்ட வெளிமுலம் நாளடைவில் குணமாகும்.
✍️கால் பித்த வெடிப்பிற்கு அரசமரத்து பாலை தடவி வர குணமாகும்.
✍️பிரண்டை எண்ணெய்யை வெட்டுக் காயத்தின் மீது போட்டால் சீக்கிரம் ஆறும்.
✍️ஊமத்தை பிஞ்சை உமிழ்நீரில் அரைத்து தடவ பழ வெட்டு தீரும்.
✍️கருவேல இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் கட்டி வர மூலம் குணமாகும்.