வளரவே வளராதுனு நெனச்ச முடிய கூட வளர வைக்கலாம்..!

வளரவே வளராதுனு நெனச்ச முடிய கூட வளர வைக்கலாம்..!

இன்றைய பதிவில் நாம் உங்களுடைய முடி பல மடங்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் எவ்வாறு வளர வைக்கலாம் என்று பார்க்கலாம். முடி நீளமாக வளர இந்தப்பதிவில் நாம் ஒரு சீரம் தயார் செய்யப்போறோம்.

இந்த சீரம் வாரத்திற்கு 3 முறை பயண்படுத்தினால் முடி நன்றாக நீளமாக அடர்த்தியாக கருப்பாக வளரும்.

முடி நீளமாக இருந்து அடர்த்தி இல்லை என்று நினைப்பவர்கள், முடி கருப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை :

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடுப்பை அனைத்து பாத்திரத்தை அதன் மேல் வைத்து தண்ணீரை சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் டீத்தூள் சேர்க்க வேண்டும். டீத்தூள் சேர்க்கும் போது முடி நன்றாக வேகமாக வளரும். முடி கொட்டும் பிரச்சனை இருக்காது.

இரண்டாவது டீத்தூள் கொதிக்கும் போது அதில் 2 வெங்காயத்தோல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வேண்டும். வெங்காயத்தோல் சேர்க்கும் போது முடி கருப்பாக 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கும் போது தண்ணீர் பாதியாக சுண்டும் அந்த அளவிற்கு தண்ணீர் கொதிக்க வேண்டும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.

ஆறிய பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேர்த்து தலைக்கி தேய்த்து வரும் போது முடி நன்றாக கருப்பாக வேகமாக வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *