முகம் அழகாக மாற வேண்டுமா? அப்போ இந்த பூவை பயன்படுத்துங்க..!

முகம் அழகாக மாற வேண்டுமா? அப்போ இந்த பூவை பயன்படுத்துங்க..!

முகம் அழகாக பாதுகாப்பாக இருக்க நிறைய முயற்சிகள் செய்வோம். ஆனால் எந்த பலனும் குடுக்காது. நாம் இயற்கையாகவே, இயற்கை முறையில் வரும் அழகான பூக்களை வைத்து நம் முகத்தை மிகவும் அழகாகவும், பளபளப்பாக பொலிவுடன் முகத்தை எவ்வாறு பாதுகாப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தாமரைப்பூ :

தாமரைப்பூ வின் இதழ்கள் சிறிது எடுத்து அதனுடன் பால் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகம் நல்ல நிறமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

ரோஜாப்பூ :

முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்க ரோஜா இதழ், வேப்பிலை சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதை முகத்தில் தடவி, அதன் மேல் ஒரு காட்டன் பஞ்சு எடுத்து அதில் பன்னீர் நனைத்து கரும்புள்ளிகள், பருக்கள் இருக்கும் இடத்தில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு பளபளப்பாகும்.

ரோஜா இதழுடன் பால் சேர்த்து அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு பளபளப்பாக இருக்கும்.

செம்பருத்தி பூ :

செம்பருத்தி பூ மற்றும் பாதம் பருப்பு இரண்டும் சேர்த்து ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவி வர, வறட்சி நீங்கி தோல் மென்மையாக மாறும்.

மல்லிகைப்பூ :

மல்லிகைப்பூ, இலவங்கம் சேர்த்து அரைத்து, அதனுடன் சந்தனம் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவி தயார் செய்த பேஸ்ட் சருமத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் முழுவதும் ஒரை நிறத்தில் இருக்கும்.

ஆவாரம் பூ :

15 ஆவாரம் பூ, 1 டீஸ்பூன் அரிசி மாவு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், ரோஜா பன்னீர் சிறிதளவு சேர்த்து பசை போல அரைத்து முகம், கழுத்து, கை, கால் முழுவதும் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சரும நிறம் மாறி பளிச்சென இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *