முகத்தை அழகாக்க இந்த பவுடர் போதும் முகம் மினு‌மினுக்கும்.

முகத்தை அழகாக்க இந்த பவுடர் போதும் முகம் மினு‌மினுக்கும்.

இன்றைய பதிவில் நாம் முகம் அழகாக பளபளப்பாக இருக்க வீட்டிலே எளிமையாக ஒரு பவுடரை தயார் செய்து அதை எவ்வாறு தயார் செய்து, பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

எல்லாரும் முகத்தை பளபளப்பாக, அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக செலவும் செய்வார்கள்‌. ஆனால் எந்த விதமான பயனும் கிடைக்காது.

இன்றைய பதிவில் நாம் உருளைக்கிழங்கு வைத்து எவ்வாறு பவுடரை எளிமையாக வீட்டிலே தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தயார் செய்யும் முறை :

இந்த பவுடரை தயார் செய்ய உருளைக்கிழங்கு முக்கியமாக தேவைப்படுகிறது. உருளைக்கிழங்கு எடுத்து தோல் சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி காரம் இல்லாத மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பிறகு அரைத்த உருளைக்கிழங்கு வடிகட்டி, அதில் வரும்‌ நீரை எடுத்து சிறிது சூடு ஏற்றி ஆரவைத்து பிறகு அதில் முள்தானி மெட்டி பவுடர் சேர்த்து கலக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காயவைக்க வேண்டும்.

அதன்‌ பின் பவுடராக அரைத்து சலிச்சி ஒரு டப்பாவில் சேர்த்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம்.

பயன்படுத்தும் முறை :

ஒரு டேபிள் ஸ்பூன் தயார் செய்த பவுடரை எடுத்து, அதில் தேவையான‌ அளவு பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி, முகத்தை கழுவி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் கழுவினால் முகம் பளபளப்பாகவும்.‌

இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மறைந்து, முகம் அழகாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *