மாத்திரைகள் சாப்பிடும் போது இது எல்லாம் கட்டாயம் கவனியுங்கள்..!

மாத்திரைகள் சாப்பிடும் போது இது எல்லாம் கட்டாயம் கவனியுங்கள்..!

உடல் நிலை சரியில்லாத நேரங்களில், உடல் குணமாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறோம். அந்த மருந்து உடலில் வேலை செய்ய வேண்டும் என்றால் நாம் ஒரு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நாம் தவறாக சாப்பிடும் உணவால் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் வேலை செய்யாமல் போகும் அந்த உணவுகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஹெவி ஃபுட் :

மாத்திரைகள் சாப்பிடும் போது எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட்டால் தான் உடல் நிலை விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளை சாப்பிடும் போது உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்படாது. மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சு கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளை சாப்பிடும் போது மருந்து வேலை செய்து விரைவில் உடல் குணமாகும்.

பால் பொருட்கள் :

பால் பொருட்களில் மருந்துகளில் இருக்கும் சக்தியை குறைக்கும் தன்மை உள்ளது. பால், தயிர், சீஸ், நெய் போன்றவற்றை மருத்து உட்கொள்வதன் போது தவிர்க்க வேண்டும்.

நார்ச்சத்து :

கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த உணவுகள் மருந்துகளில் இருக்கும் தன்மைகளை உறிஞ்சுகிறது. எனவே இது தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *