வணக்கம் நண்பர்களே..!
தினமும் காலை, மாலை என்று இரு வேளையும் டீ குடிக்கும் பழக்கம் நிறைய நபர்களுக்கு உண்டு. டீ என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். தினமும் டீ போடும் சுவையை விட, வித்தியாசமாக சுவையாக டீ எவ்வாறு செய்யலாம் என்று இந்தப்பதிவில் பார்க்கலாம்.
டீ செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 2 டம்ளர்
டீ பவுடர் – தேவையான அளவு
இஞ்சி – 1 துண்டு ( நசுக்கியது )
ஏலக்காய் – 3 ( நசுக்கியது )
பட்டை – 2
கிராம்பு – 3
சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – 1 டம்ளர்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இஞ்சி, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்த பின் அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கொதிக்கும் நீரில் சுவைக்கேற்ப டீ பவுடர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு காய்ச்சி ஆரவைத்த பாலை, கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.
ஒரு கொதி கொதித்த பிறகு வடிகட்டினால் சுவையான மசாலா டீ தயார்.