உங்கள் முகத்தில் இருக்கும்  முகப்பரு, கரும்புள்ளிகள் ஒரே நாளில் மறைய இதை மட்டும் செய்யுங்கள்!!!

உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு, கரும்புள்ளிகள் ஒரே நாளில் மறைய இதை மட்டும் செய்யுங்கள்!!!

எலுமிச்சைச் சாறு மற்றும் நீர் சேர்த்து பரு இருக்கும் இடத்தில் தடவி மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவினால் பருக்கள் மறையும். இவ்வாறு செய்வதன் மூலம் முகப்பருக்கள நீங்கி முகம் பொலிவு பெறும்.

ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும்.

தேவையான அளவு பாசிப்பயறு மாவு எடுத்து அதில் சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு நீங்கும்.

தேனுடன் சிறிது லவங்க பட்டை சேர்த்து கலக்கி பரு இருக்கும் இடத்தில் பூசலாம்.

ரோஜா பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு இரண்டும் சம அளவில் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பரு காணாம‌ல் போகும்.

சோற்று கற்றாழையின் ஜெல் எடுத்து முகத்தில் பூசலாம்.

வேப்பிலை இலை நீரில் கலந்து முகம் கழுவினால் முகப்பரு வராமல் இருக்கும்.

பப்பாளி சாறு எடுத்து முகத்தில் பூசி வர பரு மறையும்.

பூண்டு சாற்றினை பரு இருக்கும் இடத்தில் பயன்படுத்தலாம்.

தக்காளி சாறு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கும்.

காய்ச்சாத பாலை பரு இருக்கும் இடத்தில் பூசினால் முகப்பரு நீங்கும்.

அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவலாம். இவ்வாறு கழுவும் போது முகத்தில் இருக்கும் அழுக்கு வெளியேறி முகம் சுத்தமாக மாறும்.

கடுகு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *