இன்றைய பதிவில் நாம் நாம் துணிகளில் படிந்த இரத்தக்கறை, மருதாணி கறை, துணிகளில் சாயம், டீ காபி கறையை எவ்வாறு எளிதில் நீக்குவது என்று பார்க்கலாம்.
இந்த கறை எல்லாமே என்னதான் துணியை துவைத்தாலும் போகாது. கறை படிந்த துணியை நாம் அப்படியே விட்டு விடுவோம். இனி அந்த கவலை இல்லை உங்களுக்கு பிடித்த துணியில் கறை படிந்து இருந்தாலும் இனி கவலை இல்லாமல் கை வலிக்க தேய்க்காமல் சுலபமாக நீக்கலாம்.
இரத்தக்கறை :
இரத்தக்கறை பட்ட உடனே அந்த இடத்தை துவைத்தால் போகும். ஆனால் சிறிது நேரம் விட்டாலும் கறை படிந்த இடம் அப்படியே இருக்கும். என்னதான் துவைத்தாலும் போகாது.
இந்த கறையை நீக்க குளிர்ந்த நீரில் கல் உப்பு எடுத்து கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த நீரில் இரத்தக்கறை படிந்த துணியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிக்கும் சோப்பை எடுத்து துவைத்தால் கறை காணாமல் போகும்.
டீ, காபி கறை :
டீ கறையை எவ்வாறு துவைத்தாலும் போகாது. இதற்கு தண்ணீரில் சிறிது வினிகர் சேர்த்து கறை படிந்த துணியை 30 நிமிடம் ஊற வைத்து பிறகு குளிக்கும் சோப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கறை படிந்த இடத்தை தேய்த்தால் கறை மறையும்.
மருதாணி கறை :
சூடான பால் எடுத்து மருதாணி கறை எந்த இடத்தில் உள்ளதோ அந்த இடத்தை மட்டும் பாலில் 15 நிமிடம் ஊற வைத்து குளிக்கும் சோப்பில் கறை இருக்கும் இடத்தை கசக்கினால் கறை காணாமல் போகும்.
துணியின் சாயம் போக :
வெது வெதுப்பான நீரில் துணி பவுடர் சேர்த்து சாயம் பட்ட துணியை 30 நிமிடம் ஊற வைத்து துவைத்தால் சாயம் பட்ட இடத்தில் சாயம் நீங்கும்.