மணமணக்கும் ருசியான குழம்பு அதே மணம் அதே சுவையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்க..!

மணமணக்கும் ருசியான குழம்பு அதே மணம் அதே சுவையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்க..!

இன்றைய பதிவில் நாம் வத்தக்குழம்பு எப்படி சுவையாக செய்யலாம் என்று பார்க்கலாம். வத்தக்குழம்பு இது வரைக்கும் செய்து பார்க்காதவர்களும் இந்த முறையை பயன்படுத்தி செய்யும் போது சுவையாக, மணமாக செய்யலாம்.

வத்தக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் – 3 கப்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 4 (அரைத்தது)

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

கருவேப்பிலை – 1 கொத்து

காய்ந்த மிளகாய் – 3

பூண்டு – ஒரு கைப்பிடி அளவு

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்

புளி – எலுமிச்சை அளவில்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :-

முதலில் கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதக்க வேண்டும். அப்போதுதான் குழம்பு நன்றாக கிரேவி போல் இருக்கும்.

அதன் பின் அரைத்து வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

புளி நன்றாக கரைத்து புளி கரைசலை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்த பிறகு கடாயை இறக்கி ஓரமாக வைக்க வேண்டும்.

பிறகு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பிறகு வத்தல் சேர்த்து மொறுமொறு பொறித்து குழம்பில் கலந்து நன்றாக கலக்கி பரிமாறவும்.

இந்த சுவையான குழம்பு சூடான சாதத்திற்கு கலந்து சாப்பிடும் போது அதிகமாக சாப்பிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *