கொத்தமல்லி இலையில் பல்வேறு வைட்டமின்கள், ஆரோக்கியமான கண் பார்வைக்கு, இரும்புச் சத்துக்கள் என ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. மக்கள் அதிகமாக தங்கள் சமையல்களில் பயன்படுத்துகிறார்கள். எப்போதும் கிடைக்கும் பொருளாக கொத்தமல்லி இலை இருக்கிறது. இந்த தழையை பயன்படுத்தி சட்னி செய்து சாப்பிடும் போது மிக சுவையாக 10 இட்லி, 10 தோசை சாப்பிட்டாலும் பத்தாது. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் உங்களை பாராட்டி இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்போ நாம் அனைவரும் கொத்தமல்லி சட்னி எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
கொத்தமல்லி சட்னி அரைக்க தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – 1 கட்டு
வெங்காயம் – 2
தக்காளி -1
மிளகாய் – 5
தேங்காய் (துருவியது) – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 2 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
புளி – சுண்டைக்காய் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சட்னி செய்முறை
கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து, நீரில் அலசி கொள்ளவும்.
பிறகு வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் போட்டு வதக்கவும்.
சிவந்த பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும், அதன் பிறகு தக்காளி சேர்தது வதக்கவும்.
வதங்கிய பிறகு கொத்தமல்லி இலையை போட்டு வதக்கவும். அடுத்தது இஞ்சி, பூண்டு, புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்தால் சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.
தினசரி ஏன் படிகளில் ஏற வேண்டும்???
புதுமையான தொழில் / குறைந்த முதலீடு / அதிக லாபம்