இந்த குறிப்புகள் தெரிந்தால் நீங்கள் தான் சமையலில் கிங். சுவையை கூட்டும் சமையல் குறிப்புகள்!!!

இந்த குறிப்புகள் தெரிந்தால் நீங்கள் தான் சமையலில் கிங். சுவையை கூட்டும் சமையல் குறிப்புகள்!!!

நீங்கள் சமையல் செய்யும் போது உங்க சமையலில் உப்பு அதிகமாகிவிட்டதா??? இந்த குறிப்புகள் தெரிந்தால் இனி உங்களுக்கு கவலை வேண்டாம்..

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவு எடுத்து பாலில் கலந்து குழம்பில் சேர்த்தால் உப்பின் அளவை சரி செய்யலாம்.

பிரியாணி காரணமாக இருந்தால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி பிரியாணியில் கலந்தால் காரம் குறைந்து விடும்.

மீட்டர் பன்னீர், பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் ப்ரஷ் கிரீம், சூடான பால் அல்லது வெண்ணெய் சேர்த்தால் காரம் குறைந்து சுவையாக இருக்கும்.

கூட்டு, குருமா, கிரேவி வகைகளில் தண்ணீர் அதிகமானால் பாலில் சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும்.

பொறியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காய் துருவி சேர்த்தால் உப்பு குறைந்து விடும்.

தோசை மாவில் உப்பு அதிகமானால், இரண்டு கரண்டி அரிசி, அரைக்கரண்டி உளுத்தம்பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகும்.

பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதை கொஞ்சம் வாணலியில் வறுத்து தனியாக பொடி செய்து அதில் கலக்கலாம்.

ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ரசத்தைக் கொதிக்க விட்டு மிளகு, சீரகத்தூள் சேர்த்து, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து ரசத்தை இறக்கினால் உப்பின் அளவு சரியாகி விடும்.

வெண்பொங்கல் காரணமாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும்

கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற பொரியல்களில் உப்பு அதிகமானால், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி சேர்க்கலாம்.

சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் காரம் அல்லது உப்பு அதிகமானால் தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்தால் உப்பு அல்லது காரம் சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *