இட்லி ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இப்படி ஒரு முறை டிரை பன்னி பாருங்க அசந்து போவிங்க..!

இட்லி ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இப்படி ஒரு முறை டிரை பன்னி பாருங்க அசந்து போவிங்க..!

காலையில் இட்லி உணவு ஒரு சிறந்த உணவாகும். இட்லி தினம் தினம் சாப்பிடுபவர்கள் ஒரே மாதிரியான இட்லி சாப்பிட்டு போர் அடித்து விடும்.இந்த பதிவில் நாம் சுவையான வித்தியாசமான மசாலா காளான் இட்லி எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

மசாலா காளான் இட்லி செய்ய தேவையான பொருட்கள் :

காளான் : 1 பாக்கெட்

பச்சை அரிசி : 1 கப்

புழுங்கல் அரிசி : 3 கப்

உளுந்து : 1 கப்

அவல் : 1 மேசைக்கரண்டி

வெந்தயம் : 1/2 மேசைக்கரண்டி

டோபு : 100 கிராம்

வெந்தயம் : 1 மேசைக்கரண்டி ( பொடியாக நறுக்கியது )

தக்காளி : 1/2 கப் ( பேஸ்ட் )

பூண்டு : 5 பல்

இஞ்சி : 1 துண்டு

பச்சை மிளகாய் : 3

மிளகாய் தூள் : 3/4 மேசைக்கரண்டி

கொத்தமல்லி தூள் : 2 மேசைக்கரண்டி

சீரகத்தூள் : 1/2 மேசைக்கரண்டி

கரம் மசாலா தூள் : 1/2 மேசைக்கரண்டி

எண்ணெய் : 1 மேசைக்கரண்டி

புதினா : சிறிதளவு

கொத்தமல்லி இலை : தேவைக்கேற்ப

உப்பு : தேவையான அளவு

செய்முறை :

அரிசி, உளுந்து, அவல், வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி 6 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மாவு புளிக்க வைக்க வேண்டு்ம்.

வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் தூள் ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி பேஸ்ட், காளான், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி இலை, டோபு சேர்த்து கிளறி இறக்கி ஆறவைக்க வேண்டும். ஆறியதும் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டில் அரைத்து வைத்துள்ள இட்லி மாவு பாதியாக ஊற்றி அதன் மேல் உருட்டிய உருண்டை வைத்து அதன்மேல் இன்னும் கொஞ்சம் இட்லி மாவு ஊற்றி வேகவைத்து எடுத்தால் சுவையான மசாலா காளான் இட்லி தயார்.

தயார் செய்த மசாலா காளான் இட்லியை சூடாக பறிமாறி சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *