இன்றைய பதிவில் நாம் அழகு குறிப்பு அதிகமாக இருக்க கூடிய ஆரஞ்சு பவுடர் எப்படி வீட்டிலே செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த ஒரு பவுடர் உங்க வீட்டில் இருந்தால் போதும் உங்க சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்ய ஆரஞ்சு பவுடர் உதவுகிறது. இப்போ நாம் ஆரஞ்சு பவுடர் எப்படி வீட்டிலே செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தோலில் இருக்கும் நன்மைகள் :
வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட தோலில் தான் அதிகமாக உள்ளது. நமது சருமத்தை எப்போதும் பள பள வென்று வைத்துக்கொள்ள ஆரஞ்சு பழத்தோல் பவுடர் உதவுகிறது.
இறந்த செல்களினால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளை சரிசெய்ய ஆரஞ்சு பவுடர் உதவுகிறது.
செய்முறை :
ஆரஞ்சு பவுடர் தயார் செய்ய முக்கியமாக நமக்கு ஆரஞ்சு தோல் தேவைப்படுகிறது. நிறைய பேர் ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவிட்டு அதனுடைய தோல் தூக்கி போடுவர். இனிமேல் ஆரஞ்சு பழத்தோல் தூக்கி போட வேண்டாம். ஆரஞ்சு பழம் சாப்பிட்டு தோலை தூக்கி போடாமல் அதனுடைய பழத்தோலை சேகரித்து வர வேண்டும். சேகரித்து வரும் போது பாத்திரத்தில் மூடி வைக்க கூடாது. காய வைக்க வேண்டும். வெயிலில் காய வைக்க கூடாது. நிழல் பகுதியில் தான் காய வைக்க வேண்டும். ஆரஞ்சு பழத்தோலில் இருக்கும் ஈரம் காய்ந்தால் மட்டும் போதும்.
ஈரம் காய்ந்ததும் மிக்ஸியில் அரைத்து பவுடர் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு காற்று போகாதவாறு ஒரு பாக்ஸில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு தேவைப்படும் போது நாம் சருமத்தில் தடவி வர முகம் பள பள வாக மாறும்.