இன்றைய பதிவில் நாம் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய தொழிலை பற்றி பார்க்கலாம். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தே சுய தொழில் செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள். வீட்டில் இருந்தே வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே நாம் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.
தொழில் :
வீட்டில் இருந்தே மளிகை பொருட்களை வைத்து தொழில் ஆரம்பிக்கலாம். மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், பருப்பு போன்ற பொருட்களை சந்தையில் இருத்து வாங்கி வந்து கிராம் கணக்கில் அல்லது கிலோ கணக்கில் பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம்.
இதற்கு கிராம் அல்லது கிலோ அளவில் இருக்கும் கவர்கள், பாக்கெட்டை சீல் செய்ய சீலிங் இயந்திரம் தேவைப்படுகிறது.
நீங்கள் வாங்கும் பொருளை 20 கிராம், 40 கிராம், 100கிராம் அளவுகளில் பாக்கெட் செய்து விற்பனை செய்யும் போது நல்ல லாபம் எடுக்கலாம்.