இன்றைய பதிவில் நாம் பூஜை பாத்திரங்களை எப்படி எளிய முறையில் சுத்தம் செய்து பளபளப்பாக மாற்றுவது என்பதை பற்றி பார்க்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
முதலில் புளி தண்ணீரில் ஊற வைத்து கட்டியாக கரைத்து ஒரு தட்டில் 3 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அது கூடவே 3 டீஸ்பூன் பச்சை அரிசி மாவு பிறகு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு பூஜை பொருட்கள் எடுத்து தண்ணீரில் முதலில் கழுவ வேண்டும். பிறகு கலக்கி வைத்துள்ள பேஸ்டை கைகளால் எடுத்து பூஜை பொருட்கள் மீது தடவ வேண்டும். சிறிது நேரம் ஊறவைத்து Scrubber எடுத்த பூஜை பொருட்கள் மீது தேய்த்து கழுவ வேண்டும்.
அதன்பிறகு பூஜை பொருட்களை சுத்தமான காட்டன் துணியால் துடைக்க வேண்டும். கடைசியாக விபூதியை துணியால் தொட்டு பூஜை பொருட்கள் மீது நன்றாக துடைத்து எடுத்தால் பூஜைப்பொருட்கள் பளபளவென்று மின்னும்.