நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பேக்கிங் செய்து தினமும் 1000 மேல் சம்பாதிக்கலாம்!!!

புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு வீட்டில் இருந்தே தொழில் செய்து தினமும் 1000 மேல் வருமானம் தரக்கூடிய சூப்பரான தொழிலைப் பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் எளிமையாக செய்யலாம்.

தொழில் :

இன்றைய பதிவில் நாம் கருவேப்பிலை பவுடர் தொழிலைப் பற்றி பார்க்கலாம். கருவேப்பிலையில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. நிறைய மருத்துவ குணங்கள் உள்ள கருவைப்பிலை பவுடர் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்.

தயார் செய்யும் முறை :

முதலில் கருவேப்பிலை வாங்கவும். பிறகு சுத்தம் செய்து நன்றாக கழுவி, காயவைக்கவும். நன்றாக காய்ந்ததும் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தேவைக்கேற்ற அளவில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

இந்த தொழில் ஆரம்பிக்க தனியாக இடம் தேவையில்லை. அதிக முதலீடும் தேவையில்லை.

விற்பனை இடம் :

தயார் செய்த கருவேப்பிலை பவுடர் பாக்கெட்டுகளை டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆன்லைன் ஸ்டோர்களில், மூலிகை கடைகளில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *