இந்த பதிவில் நாம் செவ்வாழை சாப்பிட்டால் எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
பல விதமான வாழைப்பழம் இருக்கிறது. ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கிறது. ஆனால் செவ்வாழை மற்ற பழத்தை விட பல நன்மைகள் கிடைக்கிறது.
காலை உணவுக்கு முன் அல்லது இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கிறது. அந்த நன்மைகள் பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவியாக இருக்கிறது.
செவ்வாழை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.
மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கிறது.
புற்று நோய் வராமலும் தடுக்கிறது.
கண்கள் ஆரோக்கியமாக இருக்க செவ்வாழை சாப்பிடலாம்.
உடல் சுறுசுறுப்பாக இருக்க தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம்.
செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் பற்கள் சம்மந்தமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.
மலச்சிக்கல், அஜீரணம் போன்ற குடல் பிரச்சனை தீர செவ்வாழை அதிகமாக உதவுகிறது.
சிறுநீரக கற்கள் வராமல் பெரிதும் உதவுகிறது.
மூல நோய்க்கு மிக சிறந்த தீர்வாக இருக்கிறது.
சொரி, சிரங்கு தோல் வெடிப்பு போன்ற சரும வியாதிக்கு நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.
செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கியம் கிடைத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.